எதற்கும் தயாராக இருக்க வேண்டும்: நடிகைகள் பாலியல் விவகாரம் குறித்து சன்னி லியோன்..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகிலும் சில நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமே நடிகைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் கொச்சியில் இன்று திரைப்பட விழாவொன்றில் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோன் நடிகைகள் உட்பட பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசினார்.

அப்போது அவர் ’நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்ல வேண்டும், வெளியேற வேண்டிய இடத்தில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் நமது எல்லைகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் இழப்புகள் குறித்து கவலைப்படாமல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரபுதேவா பேசிய போது ’சில ஆண்டுகளாகவே நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் நடந்து வருவதாகவும் அதற்கு கண்டிப்பாக நீதி நியாயம் கிடைக்கும் என்றும் கூறினார்.

 

More News

நான் குழந்தை பெற்றால் செத்துவிடுவேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..!

நான் குழந்தை பெற்றால் நானும் செத்து விடுவேன், எனக்கு பிறக்கும் குழந்தையும் செத்துவிடும் என்று பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் - சல்மான்கான் படத்தில் இணைந்த 'துப்பாக்கி' நாயகி.. குவியும் வாழ்த்துக்கள்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது

நமக்கு நாளை இருக்குமா என்பது தெரியாது? விபத்தில் சிக்கிய ராஷ்மிகா தத்துவ கருத்து..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் 'நமக்கு நாளை என்பது இருக்குமா என்றே தெரியாது, எனவே நம்மை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்'

ஜெயம் ரவியின் பிறந்த நாளில் 'பிரதர்' படத்தின் முக்கிய அறிவிப்பு.. ரிலீஸ் எப்போது?

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'பிரதர்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ள நிலையில்

கீர்த்தி சுரேஷ் நடித்த  'ரகுதாத்தா'.. ZEE5 ஓடிடியில் ரிலீசாகும் தேதி அறிவிப்பு..!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான 'ரகுதாத்தா' செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியராகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.!