மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் சன்னிலியோன்: ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன் அவ்வபோது தென்னிந்திய திரையுலகில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழில் அவர் தற்போது ’வீரமாதேவி’, ’ஓ மை கோஸ்ட்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் அதாவது தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தப் படத்தில் விஷ்ணு மஞ்சு, நாகேஸ்வர ராவ் என்ற கேரக்டரிலும் சன்னி லியோன், ரேணுகா என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் உள்பட மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன்னிலியோனின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

அந்த பொண்ணை தூக்கிட்டான்னா செம வொர்த்: 'எதற்கும் துணிந்தவன்' புரமோ வீடியோ

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விறுவிறுப்பாக

மீண்டும் மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதி: என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பின் வீடு

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை!

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'  என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒரு பிரபல நடிகை இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தை 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா: இயக்குனர் யார் தெரியுமா?

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியான 'தனி ஒருவன்' என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.