மீண்டும் தென்னிந்திய படத்தில் சன்னிலியோன்: என்ன கேரக்டர் தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழில் ’வீரமாதேவி’ மற்றும் ’ஓ மை கோஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ’சாம்பியன்’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் தெலுங்கில் உருவாகி வரும் ’ஜின்னா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் சன்னி லியோன் ’ரேணுகா’ என்ற கேரக்டரில் நடிப்பதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் சன்னிலியோன் கேரக்டர் குறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனுப் ரூபன்ஸ் இசையமைத்து வருகிறார். தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தை, தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

More News

தொடங்கியது 'ஜெயிலர்' படப்பிடிப்பு: ரஜினி கலந்து கொள்வது எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவர் படத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம், இருந்தாலும் ஆவலுடன் இருக்கின்றேன்: மகேஷ்பாபு

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என்றும், ஆனாலும் அவரது படத்தில் நடிக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்

மும்பை ரெஸ்டாரெண்டில் சூர்யா-ஜோதிகா: வைரலாகும் புகைப்படங்கள்!

மும்பை ரெஸ்டாரன்ட் ஒன்றில் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயன் மகள்: என்ன செய்தார் தெரியுமா?

 கடந்த மாதம் 28ஆம்  தேதி முதல் சென்னையில் நடைபெற்ற 48வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து நேற்று பிரம்மாண்டமாக நிறைவு விழா நடைபெற்றது.

ஹீரோவாக ஜெயித்த ஜெய்: ரசிகர்களின் மாபெரும் வரவேற்பில் 'எண்ணித்துணிக'!

ஜெய் நடித்த 'எண்ணித்துணிக' திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது