இந்திக்கு செல்கிறதா 'அரண்மனை' திரைப்படம்.. சுந்தர் சி உடன் இணையும் பாலிவுட் பிரபலம்..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான சுந்தர் சி விரைவில் பாலிவுட்டில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ‘அரண்மனை’ படத்தின் ஒரு பாகத்தின் ரிமேக் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் கலர்ஃபுல்லான மற்றும் கமர்ஷியல் இயக்குனர் சுந்தர் சி பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார் என்பதும் இவர் சமீபத்தில் ’அரண்மனையில் 4’ என்ற படத்தை இயக்கி உள்ள நிலையில் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கும் அடுத்த படம் தமிழில் தான் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமாருக்கு அவர் சமீபத்தில் ‘அரண்மனை’ படத்தின் கதையை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதை அடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க அக்சயகுமார் ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

அக்சயகுமார் உடன் இந்த படத்தில் இன்னொரு பாலிவுட் பிரபலமான பாபி தியோல் இணைய இருப்பதாகவும் இந்த படம் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் என்றும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அட்லி, ஏஆர் முருகதாஸ் உள்பட ஒரு சில தமிழ் இயக்குனர்கள் பாலிவுட் பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக சுந்தர் சியும் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருவனந்தபுரம் மைதானம் முழுவதும் சிஎஸ்கே போஸ்டர்கள்.. என்ன நடக்குது 'கோட்' படப்பிடிப்பில்?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இருப்பதாகவும்

ரூ.2 கோடி மதிப்பில் பிரமாண்ட செட்.. இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு.. ஜெயம் ரவி படத்தின் அப்டேட்..!

நடிகர் ஜெயம் ரவி தற்போது கமல்ஹாசன் உடன் 'தக்லைஃப்', எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிரதர்' மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜெனி 'ஆகிய மூன்று

கேரளா சென்ற விஜய்க்கு நேர்ந்த விபரீதம்.. ரசிகர்களின் அன்புத்தொல்லையால் ஏற்பட்ட சேதம்..!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாகவும்

சூர்யாவின் 'புறநானூறு' படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு.. ரசிகர்கள் அதிருப்தி..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'புறநானூறு' என்ற படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு

பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல அது ஆண்களுக்கும் உரியது என்பதற்கு தகுந்த விளக்கம் அளித்த எழுத்தாளர் சாலின் மரியா லாரன்ஸ்.

முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அவர்களுமே சண்டை போட்டு அவமானப்படுத்தப்பட்டு வாங்கி கொடுத்ததே இந்த மருத்துவ கல்வி.எனவே எல்லாமே இங்கு கஷ்டப்பட்டு தான் நாம் அடைந்துள்ளோம்‌.....