சுந்தர் சியின் அடுத்த படத்திலும் பேய்?

  • IndiaGlitz, [Sunday,October 25 2015]

அரண்மனை' வெற்றி படத்தை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 'அரண்மனை 2' என்ற பெயரில் இயக்குனர் சுந்தர் சி இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா, ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் சுந்தர் சி-குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கும் மற்றொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'ஹலோ நான் பேய் பேசுகிறேன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை எஸ்.பாஸ்கர் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் மற்றும் விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். அரண்மனை, அரண்மனை 2 படங்கள் போலவே இந்த படமும் பேய்ப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்யவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.