சுந்தர் சியின் அடுத்த படத்திலும் 'அரண்மனை 4' பிரபலம் தான்.. மீண்டும் ஒரு 100 கோடி வசூல் படமா?

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

சுந்தர் சி இயக்கி நடித்த ’அரண்மனை 4’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது தெரிந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இரண்டு நாயகிகள் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகை ஆகாது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ’கலகலப்பு 3’ அல்லது ’சங்கமித்ரா’ ஆகிய படங்களை அவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி மீண்டும் ஒரு திகில் படத்தை தான் சுந்தர் சி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தின் முக்கிய கேரக்டரில் தமன்னா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ உட்பட சில படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடித்து இயக்கும் இந்த படத்தில் தமன்னா தவிர பிற நடிகர் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் சுந்தர் சி மற்றும் தமன்னா இணையும் இந்த படம் மீண்டும் ஒரு 100 கோடி ரூபாய் வசூல் படமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.