சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4.. குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம்

  • IndiaGlitz, [Friday,September 29 2023]

தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டும் படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர் சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களை குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம், மிகப் பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்னம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில், வேங்கட் ராகவன் வசனத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

யார் இந்த பெண்.. தேடி கண்டுபிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய இயக்குனர்..!

சமூக வலைதளத்தில் வைரலான ஒரு பெண்ணின் வீடியோவை பிரபல இயக்குனர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து யார் இந்த பெண்? என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

சென்சார் அதிகாரிகள் லஞ்சம்.. விஷால் புகாருக்கு அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!

நடிகர் விஷால் நேற்று தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சென்சார் செய்வதற்கு லஞ்சம் கொடுத்ததாக அறிவித்தார்.

'எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா சும்மா இருக்க மாட்டேன்': த்ரிஷா வெளியிட்ட டீசர்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வரும் தசரா தினத்தில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் டீசரை நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்து

அண்டை மாநிலத்திடம் ஏன் நீர் பிச்சை எடுக்க வேண்டும்: சிம்பு பட தயாரிப்பாளர் ஆவேசம்..!

அண்டை மாநிலத்திடம் ஏன் நீர் பிச்சை எடுக்க வேண்டும் என சிம்பு நடித்த 'மாநாடு' உள்பட பல திரைப்படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும்

கன்னடர்களின் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. பிரபல நடிகர் ட்விட்..!

நேற்று நடிகர் சித்தார்த் கர்நாடகாவில் தனது 'சித்தா' படத்தின் புரமோஷன் பணியில் இருந்தபோது  திடீரென கன்னடர்கள் சிலர் விழா நடந்த இடம் இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.