'அரண்மனை'யின் உரிமையாளர் யார்? சுந்தர் சி விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,January 12 2016]

கோலிவுட் இயக்குனர்களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா இதுவரை 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'ஆம்பள', அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனது விருப்பத்திற்குரிய நாயகி குறித்தும் 'அரண்மனை 2' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான ஹன்சிகா குறித்து சமீபத்தில் சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய இரண்டு படங்களையும் ஹன்சிகா இல்லாமல் நினைத்து கூட பார்க்க முடியாது. சொல்லப்போனால் 'அரண்மனை'யின் உரிமையாளர்களில் ஒருவர் ஹன்சிகா. அரண்மனை வரிசையில் இன்னும் எத்தனை பாகங்கள் எடுக்கப்பட்டாலும் கண்டிப்பாக அதில் ஹன்சிகா இருப்பார் என்று கூறியுள்ளார்.

சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடித்து இயக்கியுள்ள 'அரண்மனை 2' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. ஹன்சிகாவை தவிர இந்த படத்தில் த்ரிஷா மற்றும் பூனம் பாஜ்வா ஆகிய இரு நாயகிகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

காஜல் அகர்வாலை பின்பற்றும் ப்ரியாமணி

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்து வரும் 'சக்கரவியூகா' என்ற படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒரு பாடலை பாடி பாடகியாக அறிமுகமாகியுள்ளார் ....

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் அதர்வா

தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில் படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் அதனையடுத்து சூப்பர் ஹிட் படமான 'அங்காடித்தெரு' மற்றும் 'அரவான்'...

குற்றப்பரம்பரை படத்திற்கு தயாராகிறார் பாலா

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 'குற்றப்பரம்பரை' கதையை படமாக்க முயற்சி செய்தார்....

முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உறவினர்களின் உயிர்களையும்..

சிம்பு ஆஜராகும் விவகாரம். நீதிமன்றம் முக்கிய உத்தரவு

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் சிம்பு ஆஜராகி பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சென்னை காவல்துறை முன் ஆஜராக சிம்புவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது...