தொடங்கிய சில வாரங்களில் 4வது இடத்தை பிடித்த சன் டிவி சீரியல்.. இந்த வார டிஆர்பி தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,September 12 2024]

சன் டிவியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியல் இந்த வார டிஆர்பியில் நான்காவது இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களில் ஒரு ஆண்டுக்கும் அதிகமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மட்டுமே இடம்பெற்று வரும் நிலையில் ’மூன்று முடிச்சு’ சீரியல் முதல் 5 இடங்களில் தொடங்கிய சில வாரங்களிலேயே இடம்பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரமும் வழக்கம் போல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ தொடர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இன்னொரு தொடரான ’சிங்கப்பெண்ணே’ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது ஆதரவை பெற்று வரும் ’சிறகடிக்க ஆசை’ இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த ஒரு சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ’மூன்று முடிச்சு’ என்ற தொடர் இந்த வாரம் நான்காவது இடத்தில் உள்ளது.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மருமகள்’ சீரியல் இந்த வாரம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

முதல் ஐந்து இடங்களில் ’சிறக்கடிக்க ஆசை’ மட்டுமே விஜய் டிவி சீரியல் என்பதும் மற்ற நான்கு சீரியல்களும் சன் டிவி சீரியல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.300 கோடி வசூல் செய்த 'கோட்' திரைப்படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டமா? அதிர்ச்சி தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ஆறு நாட்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தெலுங்கு மாநிலங்களில் மட்டும்

சில விஷயங்கள் மாறுவதே இல்லை: மகன்கள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் சில விஷயங்கள் மாறுவதே இல்லை என தனது மகன்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டியது : பாலாறு சுவாமிகள்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் அளித்த சிறப்பு பேட்டியில், நம் அன்றாட வாழ்வில் எழும் பல்வேறு ஆன்மீக சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளித்துள்ளார்.

கர்ப்பமாக்கினார் நடிகர்.. நகையை திருடினார் நடிகை.. திடுக்கிடும் புகார் கூறிய பெண்..!

பிரபல நடிகர் தன்னை கர்ப்பம் ஆக்கியதாகவும், பிரபல நடிகை தன்னுடைய நகைகளை திருடியதாகவும் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார்

பாடகர் மனோ மகன்கள் பதுங்கி இருக்கும் இடம் இதுவா? விரைந்தது தனிப்படை போலீஸ்..!

மது போதையில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களுடைய இருப்பிடத்தை செல்போன்