ஒரே நாளில் ரஜினி, விஜய் படங்களின் அப்டேட்:  இன்ப அதிர்ச்சி கொடுக்க போகிறதா சன்பிக்சர்ஸ்?

நாளை அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி ரஜினிகாந்த் மற்றும் விஜய் படங்களின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே. இதுகுறித்து வெளியான வீடியோவில் நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் அரபிக்குத்து பாடல் குறித்து பேசும் காட்சிகள் இருந்தன. இந்த நிலையில் அரபிகுத்து பாடல் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்த புரமோ வீடியோவில் அனிருத், நெல்சன் மற்றும் விஜய் பேசும் சில காட்சிகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த திரைப்படமான ’தலைவர் 169’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நாளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஒரே நாளில் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, விஜய் படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரஜினி, விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுவா? 

ஜெயம் ரவி நடித்த 'பூமி'  திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் முடித்துள்ளார்

ஒரே நேரத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவின் இசை மேதைகளான இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆகிய இரண்டு இசையமைப்பாளர்களுடன் பிரபல இயக்குனர் ஒருவர்

தமிழ் சினிமாவில் கிரிக்கெட் பிரபலம் ஸ்ரீசாந்த்… அதுவும் முக்கியப் திரைப்படத்திலா?

“நானும் ரௌடிதான்“ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி

லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான சொத்துக்கு யார் வாரிசு? வெளியான புதுத் தகவல்!

இசைக்குயில் லதா மங்கேஷ்கரை அவருடைய மென்மையான குரலுக்காக மட்டுமல்ல, எளிமை மற்றும் கனிவான குணத்திற்காகவும்

என்னது 85 கோடி அபராதமா? தனி ஆளாய்ப் போராடும் விமானி!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமான நிலையத்தில் பணியாற்றிய விமானி ஒருவருக்கு அம்மாநில அரசு 85 கோடி ரூபாய்