கொரோனா வைரஸால் தாமதமாகும் கார்த்தியின் அடுத்தப் படம்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

கார்த்தி நடித்த ’கைதி’ மற்றும் ’தம்பி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ’சுல்தான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைதளத்தில் ’கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரை போற்று’ உள்பட பல திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மூன்று வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கும் லட்சுமிமேனன்: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார் 

பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' என்ற படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் அதன்பின்னர் சசிகுமாரின் சுந்தரபாண்டியன், விஜய்சேதுபதியின் 'றெக்க' என்ற உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்

திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிரகாஷ் கோவலமுடி என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளீயாகி

திடீர் நெஞ்சுவலியால் கீழே விழுந்த டிரைவர்: டிரைவர் இல்லாமல் ஓடிய ஆட்டோவால் பரபரப்பு

சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார்

திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்ட இளமதி காவல்நிலையத்தில் ஆஜர்

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி என்ற இளம் பெண் திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இளமதி மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கொரோனா கண்காணிப்பில் இருந்த 5 பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் திடீரென தப்பிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது