திருமணம் குறித்து 'பிக்பாஸ்' சுஜா அளித்த விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,May 10 2018]

பிக்பாஸ் புகழ் சுஜா வருணே, சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ்வை திருமணம் செய்யவிருப்பதாகவும், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு சுஜா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். தயவுசெய்து எனது நிச்சயதார்த்தம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் என் அன்புக்குரியவரை எப்போது திருமணம் செய்யவுள்ளேன் என்பதை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். 

திருப்பதியில் சுப்ரபாதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களது நீண்டகால திட்டம். எனவே அதை வைத்து வதந்தியை கிளப்ப வேண்டாம். நாம் எல்லோரும் நண்பர்கள், ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுப்பவர்கள். எனவே எனது திருமணம் குறித்த செய்தியை நானே அறிவிக்கும் வரை தயவுசெய்து பொறுமை கொள்ளுங்கள்

தற்போது என்னுடைய முழு கவனமும்  நான் நடித்த திரைப்படமான, 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் புரமோஷனில் மட்டுமே. உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' என்று சுஜா கூறியுள்ளார்.

More News

ரஜினி, கமல் இருவரில் ஆட்சியை பிடிப்பது யார்? குருமூர்த்தி கருத்து

கோலிவுட் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் வரும் தேர்தலில் களத்தில் குதிக்கவுள்ளனர்.

இளம் ரசிகையின் கையை விஜய் பிடித்தது ஏன்?

சமீபத்தில் சென்னையில் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தபோது கேரளாவை சேர்ந்த ஏராளமான விஜய் ரசிகர்கள் அவரை பார்க்க வருகை தந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சரண்யா விசாக்.

சிவாஜி வீட்டு மருமகள் ஆகின்றாரா பிக்பாஸ் சுஜா?

நடிகை சுஜா தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

சாவித்ரியை மீண்டும் உயிருடன் கொண்டு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்: பிரமாண்ட இயக்குனர் பாராட்டு

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'மகாநதி என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பான 'நடிகையர் திலகம்' திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காலா போன்ற காளான்கள் காணாமல் போகும்: அமைச்சர் ஜெயகுமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகை சேர்ந்த சிலரும், அரசியல்வாதிகளும் கடந்த சில மாதங்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே.