மதுபோதையில் தற்கொலை நாடகமாடிய வாலிபர் பரிதாப பலி!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
மதுபோதையில் தற்கொலை செய்ய போவதாக நாடகமாடிய இளைஞர் ஒருவரின் விளையாட்டு விபரீதமாகி பரிதாபமாக பலியான சோக சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது
திருப்பதியை சேர்ந்த சங்கர் என்பவர் கடந்த ஞாயிறு அன்று மதுபோதையுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். மதுபோதையில் இருந்ததால் அவரை அவரது வீட்டில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனையடுத்து தனது அறைக்கு சென்ற சங்கர், நண்பர் ஒருவருக்கு வீடியோகால் செய்து தான் தற்கொலை செய்ய போவதாக நாடகமாடியுள்ளார்,. வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையை கட்டி தலையில் சுருக்கு போட்டுக்கொண்ட சங்கர், நண்பருக்கு டாட்ட காண்பித்து விளையாட்டு காட்டியுள்ளார்.
இதனை வீடியோகாலில் பார்த்து அதிர்ந்த நண்பர், அவரது பெற்றோருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் உடனடியாக சென்று கதவை திறந்து பார்ப்பதற்குள் சங்கரின் உடலில் இருந்து உயிர் பிரிந்திருந்தது. தனது நண்பரிடம் விளையாட்டாக தூக்கிட்டு கொள்வதாக நாடகமாடியபோது எதிர்பாராதவிதமாக கால்சறுக்கியதால் தூக்கு கயிறு இறுக்கி அவரது உயிர் பிரிந்ததாக தெரிகிறது. மதுபோதையில் செய்த தற்கொலை நாடகத்தால் ஒரு உயிர் போனது அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com