close
Choose your channels

காவிரி நீர் பிரச்சனை. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஹாசினி

Friday, September 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகிறது. மேலும் இன்று கர்நாடகாவில் முழு அடைப்பும் அரசின் ஆதரவோடு நடந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு ஆதரவாக நடிகை சுஹாசினி ஒருசில கருத்துக்களை வாட்ஸ் அப் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் கூறியதாக ஒரு வதந்தி நேற்று முதல் பரவி வருகிறது. இதனால் சுஹாசினிக்கு தமிழர்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சுஹாசினி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து எந்த சமூக வலைத்தளங்களிலும் தான் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் வதந்தியாக உலவி வரும் அந்த கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment