காவிரி நீர் பிரச்சனை. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஹாசினி

  • IndiaGlitz, [Friday,September 09 2016]

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகிறது. மேலும் இன்று கர்நாடகாவில் முழு அடைப்பும் அரசின் ஆதரவோடு நடந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு ஆதரவாக நடிகை சுஹாசினி ஒருசில கருத்துக்களை வாட்ஸ் அப் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் கூறியதாக ஒரு வதந்தி நேற்று முதல் பரவி வருகிறது. இதனால் சுஹாசினிக்கு தமிழர்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சுஹாசினி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து எந்த சமூக வலைத்தளங்களிலும் தான் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் வதந்தியாக உலவி வரும் அந்த கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

More News

முதன்முதலாக சீனியர் நடிகருக்கு ஜோடியான அமலாபால்

கோலிவுட் திரையுலகில் நடிக்கத்தெரிந்த மிகக்குறைந்த நடிகர்களில் ஒருவராகிய அமலாபால், சமீபத்தில் தனுஷூக்கு ஜோடியாக 'வடசென்னை'...

'இருமுகன்' முதல்நாள் தமிழக வசூல் நிலவரம்

'அரிமா நம்பி; ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்த 'இருமுகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

'பைரவா' டைட்டிலில் ஒளிந்துள்ள ஐந்து முக்கிய ரகசியங்கள்

இளையதளபதி விஜய் நடித்த 60 வது படத்தின் டைட்டில் 'பைரவா' என கடந்த வாரம் அறிவித்தவுடன் இணையதளங்கள் அதிரும் வகையில்

சிம்பு படத்தில் நடிக்க்கும் தமன்னா-ஸ்ரேயா கேரக்டர்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே....

2 முக்கிய காரணங்களுக்காக ரஜினியை சந்தித்த ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களில் ஒருவரும், அவர் மீது மதிப்பிலடங்கா மரியாதை வைத்துள்ளவருமான ராகவா லாரன்ஸ்...