ரஜினிகாந்த் - மணிரத்னம் இணையும் படம் குறித்து சுஹாசினி.. என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில், இந்த செய்தி குறித்து சுஹாசினி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ’தளபதி’ என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இணைந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் ’தளபதி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், மணிரத்னம் மனைவி மற்றும் நடிகை சுஹாசினி இது குறித்து கூறிய போது, ’அப்படி ஒரு எண்ணம் எதுவும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க வதந்தி’ என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படத்தை முடித்த பின்னர் தான் அவரது அடுத்த படம் என்ன என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித் படம் ரிலீஸாகும் தேதியில் விக்ரம் படம்? வேற லெவல் தகவல்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் கூட உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே தினத்தில் விக்ரம் நடித்து

நாளைய பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சூப்பர் அறிவிப்பு..!

கீர்த்தி சுரேஷ் நடித்த "ரகு தாத்தா" என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது அவர் நடித்துள்ள அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் 'அமரன்' இசை வெளியீடு எப்போது? எங்கே? சூப்பர் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளிவருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் விழா நடைபெறும்

6க்கு 16.. மீண்டும் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்த த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள்..!

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில், விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் நடிகை  த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் த்ரிஷா இணைந்ததாக

6 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனர் களத்தில் அர்ஜுன்.. டைட்டில் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.