25 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனராகும் சுஹாசினி!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி கடந்த 1995ஆம் ஆண்டு ’இந்திரா’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே. அரவிந்த்சாமி, அனுஹாசன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் இயக்குனர் துறையில் காலடி வைத்துள்ளார். ஆனால் இம்முறை அவர் திரைப்படம் இயக்கவில்லை என்பதும் குறும்படம் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’சின்னஞ்சிறு கிளியே’ என்ற டைட்டிலில் இந்த குறும்படத்தை சுஹாசினி உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த குறும்படத்தில் அஹானா கிருஷ்ணா, சுகாசினி மணிரத்தினம், கோமளம் சாருஹாசன், மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் நடித்து உள்ளதாகவும் இந்த குறும்படம் முழுவதுமே தனது ஐபோனில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குறும்படத்திற்காக லைட்டிங் உள்பட எந்த வித டெக்னீசியனும் பணியாற்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த குறும்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளதாகவும் கெவின் தாஸ் படத்தொகுப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 20 நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த குறும்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தற்போது அமலில் உள்ள லாக்டவுன் குறித்த கதையம்சம் கொண்டது தான் இந்த குறும்படம் அவர் கூறியுள்ளார் .

More News

சென்னை மெரினா கடற்கரையில் பயிற்சி டாக்டர் தற்கொலை: பெரும் பரபரப்பு

சென்னையை சேர்ந்த பயிற்சி டாக்டர் ஒருவர் சென்னை மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டாஸ்மாக் கடை மூடப்பட்ட விவகாரம்: தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அனுமதித்த தளர்வின் அடிப்படையில் ஒருசில மாநிலங்களில்

கொரோனா நோயாளி தப்பியதால் சென்னை மருத்துவமனையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்பால்

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனே செயல்படுத்திய கேரள முதல்வர்!

திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய இயக்குனர் பாரதிராஜா!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.