அஜித் படத்தில் செய்ததை ரஜினி படத்திலும் செய்வேன்- சுதன்ஷூ பாண்டே

  • IndiaGlitz, [Monday,May 09 2016]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் முடிந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் அக்ஷயகுமார் மெயின் வில்லனாக நடித்தபோதிலும், 'பில்லா 2' படத்தின் வில்லன் சுதன்ஷூ பாண்டேவும் இன்னொரு வில்லனாக நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தனது கேரக்டர் குறித்து சுதன்ஷூ பாண்டே கூறியதாவது: இந்த படத்தின் முதல்பாகமான 'எந்திரன்' படத்தில் விஞ்ஞானியாக நடித்திருந்த Danny Denzongpa அவர்களின் மகனாக நான் நடிக்கின்றேன். இந்த படத்தில் நானும் ஒரு விஞ்ஞானிதான். அக்ஷய்குமாருடன் நான் இணைந்து நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் படமாக்கப்பட்டது. விரைவில் ரஜினியுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

என்னுடைய கேரக்டருக்காக ஐந்துவித ஹேர்ஸ்டலை ஷங்கர் தேர்வு செய்து அவற்றில் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். மேலும் எனது விஞ்ஞானி கேரக்டருக்காக அமெரிக்காவில் இருந்து ஸ்பெஷல் கண்ணாடியை ஷங்கர் வரவழைத்துள்ளார்' என்று கூறினார். எனது முதல் தமிழ்ப்படமான 'பில்லா 2' படத்தில் நானே தமிழில் டப் செய்திருந்தேன். அதேபோல் ஷங்கர் அனுமதித்தால் '2.0' படத்திலும் தமிழில் டப் செய்ய காத்திருக்கின்றேன்' என்று சுதன்ஷூ பாண்டே கூறியுள்ளார்.