திடீரென ட்ரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்...!

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவர்கள் தவறிவிட்டார் என்பதை கூறும் வகையில், திடீரென டுவிட்டரில் #ResignModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கொரோனாவின் முதல் அலையை, இரண்டாவது அலை வீரியமாக உள்ளது என்றே சொல்லலாம். தினசரி தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நம் நாட்டில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. படுக்கை வசதிகள் சரியாக இல்லாதது, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய, மத்திய அரசும், மாநில அரசும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.

வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கு பரவலாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்பதை மையமாகக் கொண்டு டுவிட்டரில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்தநிலையில் டுவிட்டரில் #ResignModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பதை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.