சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,May 17 2024]

 

பாடகி சுசித்ரா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்ததார் என்பதும், அந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடகி சுசித்ராவின் பேட்டியை தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலான ஒரு ஆடியோவில் கார்த்திக் குமார், சுசித்ராவிடம் பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் அவர் பட்டியலின பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வைரலாகி வரும் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் இல்லை என்று ஏற்கனவே கார்த்திக் குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து இருந்தார். இருப்பினும் அந்த ஆடியோ குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது இது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையரிடம் கார்த்திக் குமார் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகாரில் இணையத்தில் வைரல் ஆகி வரும் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் அதை பரப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் மனு மீது விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அரசியல் தான் முக்கியம்.. இந்திரா காந்தி படத்தை கிடப்பில் போட்ட கங்கனா ரனாவத்..!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த 'எமர்ஜென்சி' என்ற திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசியல் பணிகளில்

வெள்ளித்திரைக்கு வந்த 'சிறகடிக்க ஆசை' நடிகை..  டைட்டில் மற்றும் பூஜை புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் அண்ணாமலை - விஜயா,  முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி மற்றும் ரவி

மீண்டும் பாலிவுட் செல்லும் அனிருத்.. இன்னொரு ரூ.1000 கோடி வசூல் படமா?

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல்

எம்ஜிஆர் படத்திற்கும் பாடல் எழுதிவிட்டேன்.. ஆனாலும் ஒரு மனக்குறை.. வைரமுத்து

கவியரசு வைரமுத்து, எம்ஜிஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லை என்ற கலைக்குறை தனக்கு இருந்ததாகவும் ஆனால் அந்த குறை தற்போது தொழில்நுட்ப மூலம் தீர்ந்துவிட்டது என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பீச்சில் காற்று வாங்க போன நயன்தாரா.. கமெண்ட்களில் கவிதை இயற்றும் ரசிகர்கள்..!

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்தபடி பீச்சில் நயன்தாரா காற்று வாங்கியபடி நடக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவிதை