'சுப்பிரமணியபுரம்' நடிகை கணவரை விவாகரத்து செய்கிறாரா? அவரே அளித்த பதில்..!

  • IndiaGlitz, [Thursday,September 28 2023]

சசிகுமார் நடித்து இயக்கிய ‘சுப்பிரமணியபுரம்’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்த நடிகை, தனது கணவரை விவாகரத்து செய்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சுப்பிரமணியபுரம்’. இந்த படம் வெறும் 65 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் 30 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி படமானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நாயகியாக சுவாதி என்பவர் நடித்திருந்தார் என்பதும் தமிழில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுவாதி கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் எழுந்து வருகிறது

இந்த நிலையில் சுவாதி நடித்த ’மந்த் ஆப் மது’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சுவாதி கலந்து கொண்ட போது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுவாதி ’இப்போது நடைபெறும் விழாவுக்கும் இந்த கேள்விக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. நான் என்னுடைய பர்சனல் வாழ்க்கை பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை, அதனால் உங்கள் கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

More News

ரிலீசுக்கு முன்பே 'ஜெயிலர்' வசூலை முந்தியதா 'லியோ'?

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் ஒரு சில நாடுகளில் ஏற்கனவே இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆகி உள்ளதாக வெளியான

’பிக்பாஸ் நிகழ்ச்சியால் தாமதமாகுமா ‘கமல் 233’ படப்பிடிப்பு.. ஆச்சரிய தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார் என்பது தெரிந்ததே.

'லியோ' ஆடியோ நிகழ்ச்சியை அடுத்து மேலும் ஒரு நிகழ்ச்சி ரத்து.. மன்னிப்பு கேட்ட பிரபலம்..!

சமீபத்தில் தளபதி விஜய் நடித்த 'லியோ' ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும்

ரிஷிகேஷை அடுத்து ரம்யா பாண்டியன் சென்ற உலகப்புகழ்பெற்ற புனித தலம்.. வைரல் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷ் சென்றார் என்பதும் அங்கிருந்து அவர் பதிவு செய்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

சாலை விபத்தில் இறந்த ரசிகர்.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா..!

நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சூர்யா சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறிய