பல்கேரிய போலீசிடம் சிக்கிய சில்வாவை அஜித் காப்பாற்றினாரா?

  • IndiaGlitz, [Saturday,December 10 2016]

வழக்கமாக அஜித் பட செய்திகள், அஜித்தின் புதிய ஸ்டில்கள்தான் டிரெண்டில் இருக்கும். ஆனால் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவை பல்கேரிய போலீஸிடம் இருந்து அஜித் காப்பாற்றியதாக ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி டிரெண்டில் உள்ளது.
பல்கேரியாவில் தற்போது நடைபெற்று வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்த ஸ்டண்ட் சில்வா திடீரென நாடு திரும்பியுள்ளார். பல்கேரிய போலீஸிடம் சில்வா ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டதாகவும், அதற்காக சில்வா கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அஜித் உடனே தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சில்வாவை காப்பாற்றி உடனே இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் வதந்தி பரவி வருகிறது.
இதுகுறித்து சில்வா கூறியபோது, 'ரஜினியின் '2.0' படத்தின் பணி இருந்ததால் அஜித்திடன் அனுமதி பெற்று பல்கேரியாவில் இருந்து கிளம்பி வந்தேன். ஆனால் இங்கு என்னென்னவோ வதந்தி பரவுகிறது. இதை கேள்விப்பட்டால் அஜித்தே சிரிப்பார். ஏன் என்னை பற்றி இப்படி ஒரு வதந்தியை கிளப்புகின்றனர் என்பது எனக்கு புரியவில்லை' என்று கூறினார்.

More News

கணேஷ் என் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. விவாகரத்து குறித்து நடிகை ஆர்த்தி

பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, தனது கணவர் கணேஷை விவாகரத்து செய்துவிட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருகிறது...

ஏடிஎம் மிஷினுக்கு திதி. பிரதமருக்கு லட்டு பிரசாதம் அனுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் யார்? பொன்னையன் தகவல்

மறைந்த செல்வி ஜெயலலிதா வகித்த வந்த அதிகாரம் மிக்க பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்...

'பாகுபலி' இயக்குனருக்கு ஆந்திர முதல்வர் வைத்த கோரிக்கை

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'பாகுபலி'. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம் உலகம்...

'கருப்பு ராக்' ஆக மாறும் மொட்டை ராஜேந்திரன்

வில்லன் நடிகராக திரையுலகில் நுழைந்து தற்போது நகைச்சுவை வேடங்களில் வெளுத்து கட்டி வரும் 'மொட்டை' ராஜேந்திரன்...