ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ஸ்டுடியோக்ரீன் நிறுவனம்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,July 29 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் புரமோஷன் பணிகள் எதுவும் தொடங்காததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதம் காரணமாக ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் பற்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் செய்தியை அறிவிப்போம் என்றும் காலதாமதத்திற்கு வருத்தப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

சமையல் கலை வல்லுநராக அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள இந்த படம் ராதான் இசையில் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படம் அனுஷ்காவின் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இயக்குனர் எப்போதும் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள் தான் தோற்கிறது: 'பீஸ்ட்'   குறித்து ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது சில ச

'இதுமாதிரி உங்களுக்கு  நடந்தா சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள்: கலாநிதி மாறன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசிய போது ரஜினிக்கு நடந்தது போல்

'ஜெயிலர்' ஆடியோ விழாவில் ரஜினி கூறிய கழுகு-காக்கா கதை.. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் படக்குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

ஒரு ஐபோனுக்காக கைக் குழந்தையை விற்ற பலே தம்பதி? வசமாக சிக்கிய சம்பவம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் வசித்துவரும் தம்பதி இருவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வரும் நிலையில் அவர்கள் ஐபோனை வாங்குவதற்காக தங்களது 8 மாத ஆண் குழந்தையை விற்றுள்ள சம்பவம்

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் பான் இந்திய திரைப்படம்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட் இணையும்  மட்கா என பெயரிடப்பட்டுள்ள ,பான் இந்தியா திரைப்படம் பூஜை விழாவுடன்,  பிரமாண்டமாக துவங்கியது