கொரோனா நோய்த்தொற்றுக்கு அளிக்கப்படும் மருந்துகளின்மீது செய்யப்படும் ஆய்வுகள்!!! முடிவு என்னவாகும்???

  • IndiaGlitz, [Wednesday,April 15 2020]

 

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும்நிலையில் சமூக விலகல் ஒன்றே கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் நோய்த்தொற்று ஒருவரது உடலில் புகுந்துகொண்டுவிட்டால் உடனே மரணம்தான் என்ற தவறான புரிதல்களும் மக்களை பீதியடையச் செய்திருக்கிறது. உண்மையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியான நோய்களையோ, பாதிப்புகளையோ ஏற்படுத்துவதில்லை. இதன் தன்மை ஆளுக்கு நாள் மாறுபடுகிறது.

கொரோனா அறிகுறி

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுபவர்களில் பலருக்கு தீவிரமான சிக்கல் ஏற்படுவதில்லை. அடிப்படையான தொண்டைவலி, மூக்க அடைப்பு, ஜலதோஷம் உள்ளிட்ட அறிகுறிகள் மட்டுமே ஏற்படுகின்றன. பலர் எந்த அறிகுறிகளும் கொண்டிருப்பதில்லை. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் அனைவருக்கும் சிகிச்சை தேவைப்படுவதில்லை. இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நபர்களில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே தீவிரச் சிகிச்சை தேவைப்பட்டு இருக்கிறது. மேலும் 10 விழுக்காட்டினருக்கு நெபுலைசர் போன்ற சுவாச கருவிகளைக்கொண்டு ஆக்சிஜன் செலுத்தும் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும், நீரழிவு, இருதய நோய் போன்ற தொல்லைகைளில் இருப்பவர்களுக்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒரு நபர் தும்மும்போதும் இருமும்போதும் 40 ஆயிரம் கொரோனா வைரஸ்களை பரப்புகிறார். இதனால் தான் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், நோய்க் கிருமிகள் பொருட்களின்மீதும், நீர்த்துளிகளிலும் தங்கிவாழும் தன்மைக்கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்படுகின்றனர். சீனாவில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறிகளைக்கொண்டிருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் பலருக்கு சாதாரண நிமோனியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா போன்ற நாடுகளில் தனிமைப்படுத்துவதற்கு என்று எந்த இடத்தையும் அரசாங்கம் ஏற்படுத்தி வைதிருப்பதில்லை. நோய் அறிகுறிகள் தீவிரமாகும் வரை அவர்களை வீட்டிலேயே தனிமைப்பட்டு இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

கொரோனா நோய்க்கிருமிகள் மனித செல்களில் உள்ள ACE2 புரத ஏற்பிகளைப் பயன்படுத்திக்கொண்டு செல்லுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்துவிடுகின்றன. செல்லுக்குள் நுழைந்துவிட்ட வைரஸ்கள் RNA ரைபோசோம் ஜெராக்ஸ் எடுப்பது போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை செல்லுக்குள் ஏற்படுத்திவிடும். இப்படி நோய்த்தாக்கம் அதிகரிக்கும்நிலைமையில் நமது உடலில் உள்ள செல்கள் மிகவும் எச்சரிக்கையாக பல வைரஸ்களை தாக்கி அழிக்கிறது. சிலவற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சுரப்பிகளை சுரந்து அழிக்கிறது. இப்படி நோய் எதிர்ப்பு சுரப்பிகள் அதிகபடியாக சுரக்கும்போது அவை நுரையீரல்களில் புண்ணை ஏற்படுத்தும். இப்படி நுரையீரல் பாதிக்கப்படும் போது சுவாசம் தடைபடும் என்றாலும் நோய்த்தொற்றின் வீரியம் குறைவதால் சில நாட்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர் முழுமையாக குணமடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இது இயல்பாக உடலில் நடக்கு இயக்கம். இதற்குமாறாக வறுமையால் பீடித்தவர், சரிவிகித உணவை எடுத்துக்கொண்டவர்களின் உடல்நிலையில் வைரஸ்க்கு எதிராகத் தாக்கி அழிக்கும் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதில்லை. எனவே வைரஸ்களை கொல்லும் தன்மையுடைய ஆண்டிபயாடிக்குகள் செலுத்தப்படுகிறது. சிலநேரங்களில் செல்களில் சுவாசக்கோளாறு ஏற்பட்டு செல்களுக்குள் இருக்கும் கார்பன்மை ஆக்சைடை வெளியேற்ற முடியாமல் தவித்தும், ஆக்சிஜன் உள்ளே வருவதை தடைசெய்தும் பிரச்சனைகள் தோன்றுகிறது. இத்தகைய நேரங்களில் செயற்கையாக சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. நோயின் தீவிரத்தன்மை ஏற்படும்போது மற்ற உடல் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்போது தீவிரச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவரை நான்கு வகையான மருந்துகள் உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காகக் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மருந்துகள் ஆய்வுநிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இன்டர்ஃபிரான் – நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுவது இல்லை. நோய்த்தொற்று முற்றாத நிலையில் இந்த மருந்தைப் பயன்படுத்த முடியாது என்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தவே இந்த இன்டர்ஃபிரான் பயன்படுத்தப்படுகிறது. நோய்த்தொற்று பரவும் வேகத்தில் வைரஸ் பாதிப்புள்ள செல்களை தானாகவே அழித்து விடும் திறமை நமது உடலுக்கு இருக்கிறது. ஒருவேளை நோய்த்தொற்று முற்றாத நிலையில் இன்டர்ஃபிரான் கொடுக்கப்பட்டால் அப்படி நல்ல நிலையில் உள்ள செல்களையும் சேர்த்து அழித்துவிடும் என்பதால் இன்டர்ஃபிரான் கொடுக்கப்படும் நேரம் மிகவும் எச்சரிக்கையாக மருத்துவர்களால் அணுகப்படுகிறது. இன்டர்ஃபிரான் எய்ட்ஸ் உட்பட அனைத்து வைரஸ்கிருமிகளுக்கும் மிகவும் நேர்த்தியான பயனை அளித்து வருவது மருத்துவ ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர நமது செல்லுக்குள் வைரஸ்கள் நுழைவதை தடுக்க ஏதாவது மருந்தை பயன்படுத்தலாமா???

வைரஸ்கள் குறிப்பிட்ட அமிலத்தன்மையின் விளைவுகளால் செல்லுக்குள் உள்ளே நுழைகின்றன. இப்படி செயற்கையாக ஏற்படும் அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதில் ஹைட்ராக்சி குளோரோகுயின் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த மருந்தைப்பயன்படுத்தும்போது பக்கவிளைவுகளும் அதிகம். கொரோனா வைரஸை பொருத்தவரையில் ACE2 புரத ஏற்பிகளைப் பயன்படுத்தி செல்லுக்குள் உள்ளே புகுந்துவிடுகிறது. உள்ளே புகுந்த வைரஸ் குறைந்த நேரத்தில் பல்லாயிரக்கணக்கான நகல்களை எடுத்துவிடுகிறது. இப்படி எடுக்கும் நகல்களை கட்டுப்படுத்துவதற்குத்தான் தற்போது உலகம் முழுவதும் மருந்தைத் தேடிவருகிறார்கள். நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை கொல்வதற்காக உடல் தானாகவே வினையாற்றி பல செல்களைக்கொன்றுவிடுகிறது. இப்படி பரவாமல் தடுக்கப்படும் போது நோய் கட்டுக்குள் வரும். நகல் எடுப்பது அதிகரிக்கும்போது பிரச்சனையே வருகிறது. இந்த செயலைத் தடுப்பதற்காக எபோலா, மற்ற சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களுக்குப் பயன்படுத்தும் ritonavir/lopinavir போன்ற மருந்துகள் பயன் அளிக்குமா என்கிற ரீதியில் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அடிப்படையில் கொரோனா வைரஸ் உருவாக அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருள் தேவைப்படுகிறது. அடினோசைன் ட்ரைபாஸ்பேட் தன்மையைக்கொண்டிருக்கும் Remdsivir எனும் வேதிப்பொருள் செல்களுக்குள் செலுத்திவிட்டால் வைரஸைகளைக் குழப்பி விடும் தன்மையை பெறமுடியும். மற்ற வைரஸ் நோய்த்தொற்றில் இந்த Remdsivir வேதிப்பொருள் மிகுந்த பயனை அளித்திருக்கிறது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் எப்படி பயன்படும் என்பதைக்குறித்தும் தற்போது ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. இத்தகைய முயற்சிகளைத் தவிர மேலும் உலக நாடுகளால் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

சாலிடாரிட்டி – கூட்டு ஒற்றுமை என்ற மருத்துவ ஆய்வு ஒன்று ஈரான், இந்தியா, சீனா, நார்வே, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட Remdsivir, ritonavir/lopinavir, இன்டர்ஃபிரான், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற மருந்துகள் நோயாளிகளிடம் எந்த விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்த மருந்துகள் மரணத்தை தடுக்கும், வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசத்தை சரிசெய்கிறது என்கிற ரீதியில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை உள்பட 22 மாவட்டங்கள் அபாகரமானது: மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 22 மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அல்லது அபாயகரமான மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிம்பு, பிரபுதேவாவுடனான உறவு குறித்து மனம் திறந்த நயன்தாரா

நயன்தாரா என்றாலே ஒரு பக்கம் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஞாபகம் வந்தாலும், இன்னொரு பக்கம் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் அவர் இருந்த ரிலேஷன்ஷிப் ஞாபகம் வரும்.

தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் எத்தனை பேர்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில்

ரஜினி மகளுக்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் மணிரத்னம்: காரணம் இதுதான்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் சும்மா இருக்கும் திரையுலகினர் பலர் வீடியோக்கள், புகைப்படங்கள்

ஊரடங்கு நேரத்தில் அலறியடித்து ஒடிய திருப்பூர் இளைஞர்கள்: காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதித்து,