close
Choose your channels

நடிகையாக்குவதாக கூறி பாலியல் சீண்டல்: PBSS பள்ளி மாணவிகள் பகீர் வாக்குமூலம்

Sunday, May 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமாவில் நடிகையாக்குவதாக கூறி பாலியல் சீண்டல் செய்ததாக பள்ளி மாணவிகள் PBSS பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றஞ்சாட்டி வாக்குமூலம் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார் என்பதும், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் PBSS பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் மீதும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் மேலும் சில ஆசிரியர்களிடம் இது குறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் PBSS பள்ளியில் படித்த மாணவிகள் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் தாராளமாக புகார் கொடுக்கலாம் என்றும் அவர்களது பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்

இதனை அடுத்து பல மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இதில் சில மாணவிகள் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி PBSS பள்ளி ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது. விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரச் சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் சிலர் கூறியுள்ளதாக விசாரணை அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment