திருமணமான ஆசிரியையுடன் 16 வயது மாணவன் கள்ளக்காதல்: 

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகவான் என்ற ஆசிரியரால் ஆசிரியர் வர்க்கமே பெருமை அடைந்தது. ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரை உலகமே போற்றியது. இந்த நிலையில் பகவான் போன்ற ஆசிரியர்கள் இருக்கும் இடத்தில் ஆசிரியை ஒருவர் அந்த தொழிலுக்கே இழுக்கு ஏற்படும் வகையில் கள்ளக்காதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரியா என்ற ஆசிரியையைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரவி என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. ரவி பெங்களூரில் பணிபுரிவதால் இருவரும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். பிரியா ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வீட்டிலும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் டியூஷன் படிக்க வந்த 16 வயது மாணவர் ஒருவருக்கும் பிரியாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் ஒருகட்டத்தில் திடீரென இருவரும் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் கணவர் ரவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் பிரியாவும் மாணவரும் மைசூரில் குடும்பம் நடத்தி வந்ததை கண்டுபிடித்து பிரியாவை அவரது கணவரிடமும், மாணவரை அவரது பெற்றோரிடமும் ஒப்படைத்தனர்,

இந்த நிலையில் பிரியாவுடன் மீண்டும் அந்த மாணவர் கள்ளக்காதலை தொடரந்ததால், பிரியாவை அவருடைய தாயார் வீட்டுக்கு ரவி அனுப்பிவிட்டார். இதனையறிந்த அந்த மாணவர் பிரியாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று பிரியா தன்னுடன் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியாவின் உறவினர்கள் அந்த மாணவனை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இருப்பினும் பிரியா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று அந்த மாணவர் புலம்பி வருகிறாராம். அவருக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

More News

முஸ்லீம் சிறுமியை தத்தெடுத்த வாலிபருக்கு 16 கத்திக்குத்து

முஸ்லீம் சிறுமி ஒருவரை தத்தெடுத்த நபர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று 16 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் யார்? போலீசார் விசாரணை

கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீபாவளி ரேஸில் ஐந்து முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸா?

வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் 'சர்கார்', அஜித்தின் 'விசுவாசம்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய திரைப்படங்கள் வெளியாகலாம் என்று கூறப்பட்டது.

'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு    

இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் தனது திறமையான திரைக்கதையை வைத்து இயக்கிய திரைப்படம் '8 தோட்டாக்கள்'. துப்பாக்கியைப் பறிகொடுக்கும் இளம் போலீஸ் அதிகாரியையும்,

தியேட்டரில் உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்றவரை தாக்கிய அரசியல்வாதி

சமீபத்தில் தியேட்டர் கட்டணம், பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டது தெரிந்ததே. இத்துடன் சேர்த்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கு வேறு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.