close
Choose your channels

கமல் கூட்டத்தில் கல், முட்டை வீச்சு! பெரும் பரபரப்பு

Friday, May 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முன் தினம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவரை நோக்கி மர்ம நபர்கள் சிலர் காலணியை வீசிய நிலையில் நேற்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கல் மற்றும் முட்டை வீச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் இந்த பரபரப்பு தொற்றியுள்ளது. நேற்று அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பேசியபோது, தன்னுடைய இந்து தீவிரவாதம் குறித்த பேச்சு சரித்திர உண்மை என்றும், இந்த கருத்தில் இருந்து தான் பின்வாங்க போவதில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து காருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரை நோக்கி கல் மற்றும் முட்டைகள் வீசப்பட்டது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் கல்வீசியவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கல்வீசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல் கட்சியின் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடத்திய நிர்வாகிகளுடன் எஸ்.பி.விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசப்படுத்தினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment