எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பத்திரிகையாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

பின்னர் எஸ்வி சேகர் வீடு முன்பும் பத்திரிகையாளர்கள் பெருமளவில் கூடி எஸ்.வி.சேகர் வீட்டை விட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்

இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென எஸ்.வி.சேகர் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்டு ஆவேசமாக கோஷமிட்ட ஒருசில பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இன்னும் பல பத்திரிகையாளர்கள் எஸ்வி சேகர் வீட்டின் முன் இருப்பதால் பரபரப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது.

More News

புதிய வீடு புதிய சவால்கள்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து மாற்றி,

கமலாலய வாசலில் களமாடும் பத்திரிக்கையாளர்கள்

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து

எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயகுமார் விளாசல்

சமீபத்தில் தமிழக கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

படிக்காமல் பதிவு செய்துவிட்டேன்: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர்

பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.