ஸ்டாலின் பழமொழி: குசும்பர்கள் ஆன நெட்டிசன்கள்

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

திமுக தலைவர்  கருணாநிதி பேசிய ஆயிரக்கணக்கான மேடைகளில் ஒரு பிழையும் இன்றி தெள்ளத்தெளிவாக பேசும் வழக்கத்தை உடையவர். அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவர் பேசும் தமிழ் மொழியில் யாரும் குற்றம் காண முடியாது.

ஆனால் அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவ்வப்போது மேடையில் பேசும்போது திணறுவது மட்டுமின்றி மாற்றி மாற்றியும் பேசுவதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புத்தக விழாவில் பேசிய முக ஸ்டாலின் 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்பது போல இந்த புத்தகம் வெளியாகும் முன்பே நமக்கு விடுதலை கிடைத்துவிட்டது' என்று பேசினார். உண்மையில் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ' என்று தான் நிஜமான பழமொழி. இவ்வளவிற்கும் ஸ்டாலின் எழுதி வைத்த குறிப்பை பார்த்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினின் இந்த பேச்சு நெட்டிசன்களுக்கு கிடைத்த அல்வா போல் ஆகிவிட்டது. அவர்கள் தங்களது குசும்புத்தனத்தை காட்ட ஆரம்பித்துவிட்டதால் #ஸ்டாலின்_பழமொழிகள் என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டில் உள்ளது. நெட்டிசன்களின் ஒருசில குசும்பு கலாய்ப்புகள் இவை:

கற்பூரத்துக்கு தெரியுமா கழுதையின் வாசனை....
புளிக்க புளிக்க பாலும் பழகும்
ஒரு சோறுக்கு ஒரு பானை பதம்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகும் ..,
நக்குற மாட்ட மேயிற மாடு கெடுத்துச்சாம்..
வேட்டியிலிருந்த ஓணானை எடுத்து வேலியில் விட்டு விட்டார்கள்
சும்மா கிடந்த ஆண்ட்டியை ஊதி கெடுத்தானாம் சங்கு
குஞ்ச மிதிச்சா கோழி செத்துரும்..

இன்னும் இதுபோல் நெட்டிசன்களின் குசும்புகள் நூற்றுக்கணக்கில் பதிவாகி வருகிறது. ஸ்டாலின் இவ்வாறு மாற்றி பேசுவது இது புதிதல்ல. ஏற்கனவே அவர் சுதந்திர தினத்தை குடியரசு தினம் என்றும், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்றும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அன்பை வெளிப்படுத்த ஐதராபாத் பறந்து சென்ற சிம்பு

நடிகர் சிம்பு அவ்வப்போது கோபப்படும் நபராக இருந்தாலும் அன்பை அதிகமாக வெளிக்காட்டுவதிலும் அவரை போல் யாருக்கும் இருக்க முடியாது என்பது அவரிடம் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்

சிம்புவின் புதிய நண்பராக மாறிய விஜய்சேதுபதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாதவன் சென்றது ஏன்? தீபா அதிர்ச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா ஒரு கட்சியையும், அவரது கணவர் மாதவன் ஒரு கட்சியையும் தொடங்கியுள்ளனர். இருவருமே அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

4000 பேர் சுற்றி நின்று கைதட்டிய காலா வசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஹிட்டாகிவிட்டதால்

ஆக்சன் - த்ரில்லர் தெலுங்கு படத்தில் 'கபாலி' நடிகை

'கபாலி' உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை தன்ஷிகா ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல கதாசிரியர் கிரண் இயக்கும் முதல் படமான இந்த படம் ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது