வெற்றிடம் குறித்து அறிவியல்பூர்வ விளக்கம் அளித்த ஸ்டாலின்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிடத்தை நான் நிரப்பவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று ரஜினிகாந்த் சமீபத்தில் கூறினார். கமல்ஹாசனும் வெற்றிடத்தை நிரப்புவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோட்டில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் பேசியபோது வெற்றிடம் குறித்து ஒரு அறிவியல் பூர்வ விளக்கத்தை அளித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. வெற்றிடம் என்பது ஏற்பட்ட அடுத்த கணமே நிரப்பப்பட்டுவிடுகிறது என்பது அறிவியல் என்று கூறினார். மேலும் இதனையே அவர் ஆங்கிலத்தில் 'A Vaccum is filled as it is created' என்றும் ஸ்டாலின் கூறினார்.

மேலும் ஒருசிலர் அரசியல் கட்சி ஆரம்பித்து எந்த பக்கம் செல்வது என்று முடிவெடுக்காமல் மய்யத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், இன்னும் ஒருசிலர் வெற்றிடத்தை நிரப்பலாம் என கற்பனை குதிரையில் பயணம் செய்து கொண்டிருப்பதாகவும், அவர் கமல் மற்றும் ரஜினியை மறைமுகமாகவும் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோ இல்லாத அரசு: கமல்ஹாசன் காட்டம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் பதவி பறிப்பு: ஐபிஎல்-க்கும் சிக்கல் வருமா?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல்ல உங்க துறையை கவனிங்க கமல்: தமிழிசை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தற்போது உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்க தயார் என கமல்

ப.சிதம்பரத்தின் டீ-காபி டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி

ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள 'காபிடே' கடையில் ஒரு டீயின் விலை ரூ.135 என்றும் காபியின் விலை ரூ.180 என்றும் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்: தூத்துக்குடி மக்களுக்கு கமல்ஹாசனின் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.