'ஆர்.ஆர்.ஆர் 2': எஸ்.எஸ்.ராஜமெளலி கூறிய சூப்பர் தகவல்!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமௌலி கூறிய தகவல் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான், ஆலியா பட் உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’ . ரூ.550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ’ஆர்.ஆர்.ஆர்’ 2ஆம் பாகத்தை விரைவில் உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்ட நிலையில் தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு எஸ்.எஸ்.ராஜமெளலி பதில் கூறியுள்ளார். நானும் என்னுடைய தந்தை விஜயேந்திர பிரசாத் அவர்களும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அடுத்த பாகம் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கப்படும். விஜயேந்திர பிரசாத் அவர்கள் இரண்டாம் பாகத்தை கதையை எழுதி வருவதாகவும் கூறியுள்ளார். எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அமேசான் காடுகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா? கதையை கேட்டு கண்கலங்கிய ரக்சிதா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள திருநங்கை ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா என அவருடைய காதல் கதையை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதுபோன்ற முட்டாள்கள் இன்னும் வளர வேண்டும்: ரக்சிதா கணவரின் இந்த போஸ்ட் யாருக்காக?

இவர்கள் போன்ற முட்டாள் ஆண்கள் இன்னும் வளரவேண்டும் என ரக்சிதாவின் கணவர் தினேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பொன்னியின் செல்வன் 2': மணிரத்னம் செய்த திடீர் மாற்றம்!

 மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி”  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!! 

கோபுரம் ஸ்டுடியோஸ்  சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் படம் “ரங்கோலி”. 

நீங்கள் நண்பர்கள் என்று நம்பியவர்கள் கூட ஆதரவு கொடுக்கல.. கமல் கூறுவது யாரிடம்?

 நீங்கள் நண்பர்கள் என்று நம்பி இருப்பவர்கள் கூட உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரிடம் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.