பாலிவுட் திரைப்படங்களின் தோல்விக்கு இந்த ஒரு காரணம் தான்.. எஸ்.எஸ்.ராஜமெளலி

  • IndiaGlitz, [Saturday,December 17 2022]

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து கொண்டிருப்பதற்கு இந்த ஒரு காரணம் தான் என பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான், அமீர்கான், அக்சயகுமார் உள்பட பல பாலிவுட் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன என்பதும் இதனால் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் தென்னிந்தியாவில் வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., விக்ரம், பொன்னியின் செல்வன், காந்தாரா, கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்கள் வசூலில் சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் திரைப்படங்கள் தோல்வி குறித்து இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறியபோது 'பாலிவுட் சினிமா தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் இருக்கிறது என்றும் அதனால் நடிகர்களும் இயக்குனர்களும் ஏராளமாக சம்பளம் பெறுகிறார்கள் என்றும் அதிக சம்பளம் கிடைப்பதால் அவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற பசி குறைந்து விட்டது என்றும் அதனால்தான் படங்கள் தோல்வி அடைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு திரைப்படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்றால் பார்வையாளர்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து கொண்டு இயக்கினால் மட்டுமே வெற்றி என்ற மந்திரம் கிடைக்கும் என்றும் கூறினார்.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் இதே நிலை பாலிவுட் திரை உலகினர் வர வேண்டுமென்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மூழ்கி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சீட்டாட்டம் விழிப்புணர்வு குறித்து படமே எடுத்தேன்: ஆன்லைன் ரம்மி குறித்து பிரபல நடிகர்!

சீட்டு விளையாட்டினால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு திரைப்படமே எடுத்தேன் என தமிழ் நடிகர் ராஜ்கிரன் அவர்கள் கூறியுள்ளார்.

மதுரை முத்துவின் முதல் மனைவி.. இதுவரை யாரிடமும் சொல்லாத விஷயம்!

மதுரை முத்துவின் முதல் மனைவி குறித்து இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு விஷயத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

ட்ரோன் மூலம் படமாக்கப்படும் 'சூர்யா 42': வைரல் புகைப்படம்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி இதுவா?

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக

'வாரிசு' படத்தின் ரிலீஸ் உரிமையையும் வாங்கிய ரெட் ஜெயண்ட்: கோலிவுட்டில் பரபரப்பு

வரும் பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் தல அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தை படத்தின் தமிழக ரிலீஸ்