'பாகுபலி 3' எப்போது? பிரபாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.எஸ்.ராஜமெளலி..!

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இதன் மூன்றாம் பாகம் எப்போது என்பது குறித்த தகவலை அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ’பாகுபலி’ திரைப்படம் வெளியானது என்பதும், ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. அதேபோல் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் கிட்டத்தட்ட ரூ.1800 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ’பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் ‘பாகுபலி 3’ திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் தான் திடீரென ’ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கினார் என்பதும் அந்த படமும் ரூ.1300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கிவிட்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் 'பாகுபலி - கிரவுன் ஆஃப் பிளட்ஸ்' என்ற அனிமேஷன் வெப் தொடர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டார். மே 17ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த வெப்தொடரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.எஸ்.ராஜமெளலி, ’பாகுபலி’ திரைப்படம் தனக்கு எப்போதும் ஸ்பெஷல் என்றும் அந்த படத்திற்கு தனது மனதில் தனி இடம் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ’பாகுபலி 3’ எப்போது உருவாகும் என்று பல தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் என்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ படம் முடிந்தவுடன் நான் ’பாகுபலி’ படத்தின் மூன்றாவது பாகத்தை தொடங்கி இருக்க வேண்டும் என்றும் ஆனால் கண்டிப்பாக மிக விரைவில் அந்த படம் உருவாகும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மகேஷ்பாபு படத்தை முடித்தவுடன் அவர் ’பாகுபலி 3’ திரைப்படத்தின் பணிகளை தொடங்குவார் என்றும் ஏற்கனவே பிரபாஸுடன் இது குறித்த பேச்சு வார்த்தையை அவர் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.