close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தில் இந்த பிரபலம் தான் வில்லன்? ஆச்சரிய தகவல்..!

Wednesday, July 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் சில பான் இந்திய நடிகர்களும், சில ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக பிரித்விராஜ் தென்னிந்திய திரையுலகில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ’ஆடு ஜீவிதம்’ மற்றும் ’குருவாயூர் அம்பல நடையில்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் காடுகளில் நடக்கும் ஒரு ஆன்மீக சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.