எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படம் எத்தனை பாகங்கள்? கதை என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 12 2023]

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் ஆஸ்கர் விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் அமேசான் காடுகளில் இந்த படம் உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை இந்து கடவுள்களில் ஒன்றான அனுமனை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 3 பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி’ இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படம் மூன்று பாகங்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்திய திரையுலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.