குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு விசிட்… இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி தற்போது இந்திய அளவில் பிரபல இயக்குநராக உருவெடுத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன், ஃபேண்டசி மற்றும் வரலாற்று திரைப்படங்களை பிரம்மாண்டமாக இயக்கிவருபவர் இயக்குநர் ராஜமௌலி. இவருடைய அப்பா விஜயேந்திர பிரசாத்தும் பிரபல திரைக்கதை எழுத்தாளராக இருந்து வருகிறார். அந்த வகையில் தனது அப்பாவுடன் இணைந்து சினிமா துறையில் கலக்கி வரும் இயக்குநர் ராகுமௌலி ‘மகதீரா’ வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குநர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.

தொடர்ந்து ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு அவர் இந்தியா முழுக்கவே பிரபலமாகி இருக்கிறார். மேலும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை இயக்கிய அவர் அந்தத் திரைப்படத்திற்காக ‘கோல்டன் குளோப்ஸ்‘ ‘ஆஸ்கார்’ விருதுகளை வாங்கி குவித்ததும் குறிப்பிடத்தக்கது. இயக்கத்தை தவிர, தான் இயக்கும் சில திரைப்படங்களில் இவர் அவ்வபோது கேமியோ ரோல்களில் நடிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது மனைவி ரமா மற்றும் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மருமகள் பூஜா, மகள் மயூகாவுடன் இணைந்து தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்துள்ளார். இவருடைய மனைவி ரமா திருமணத்திற்கு பிறகு பேஷன் டிசைனராக பல திரைப்படங்களில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தூத்துக்குடிக்கு வந்த ராஜமௌலியின் குடும்பத்தினர் அங்குள்ள நீர் வீழ்ச்சி ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர். மேலும் தங்களது நினைவை விட்டுச்செல்லும் வகையில் அந்த ரிசார்ட்டில் மரம் நட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை அந்த ரிசார்ட் நிர்வாகத்தினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

இயக்குநர் ராஜமௌலி அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இதற்கான கதையை அவருடைய அப்பா விஜயேந்திர பிரசாத் உருவாக்கி வரும் நிலையில் படப்பிடிப்பு வரும் 2024 இல் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.

More News

முதுகலை பட்டத்துடன் வெளியே வந்த கைதி.. சிவகார்த்திகேயன் அப்பா குறித்த நெகிழ்ச்சியான சம்பவம்..!

 நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா ஜெயில் சூப்ரெண்ட்டாக பணி செய்து கொண்டிருந்த நிலையில் அவர் பணியில் இருந்த போது படிப்பு வாசனையே இல்லாமல் சிறைக்கு வந்த கைதி ஒருவர் வெளியேறும் போது

கன்னட சினிமாவிலும் போதைப்பொருள் சர்ச்சை… மனைவி மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் சர்ச்சை தற்போது பூதாகரமாகி இருக்கும் நிலையில் கன்னட சினிமா துறையில் தயாரிப்பாளராக இருந்துவரும் சந்திரசேகர் என்பவர் தனது மனைவி மீது அடுக்கடுக்கான

போதைப்பொருள் நபருடன் தொடர்பா? விஜய், விக்ரம் பட நடிகை சுரேகா வாணி விளக்கம்!

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் தொடர்பான விவகாரம் தற்போது தலைதூக்கியிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய்யை அடுத்து 'அசுரன்' வசனத்தை கூறிய முதல்வர் ஸ்டாலின்.. வெற்றிமாறனுக்கு கிடைத்த பெருமை..!

சமீபத்தில் நடிகர் விஜய், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'அசுரன்' படத்தின் வசனத்தை குறிப்பிட்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறிய நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர்

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை வெளியீடு..!

இந்த ஆண்டு இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை சற்றுமுன் வெளியாகியுள்ளது.