ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி! சிக்குகிறாரா முன்னணி நடிகர்?

  • IndiaGlitz, [Sunday,October 28 2018]

தெலுங்கு திரையுலகிலும் தமிழ் திரையுலகிலும் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, மீடூ விவகாரத்திற்கு பின்னர் அதிக தைரியத்துடன் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர் மற்றும் நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள ஒருவரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல ஹீரோயின்கள் மற்றும் துணை நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்திய அவர் மீடியா முன்பு புத்திசாலித்தனமாக பேசியதாகவும், அவரை பற்றி தனக்கு அனைத்தும் தெரியும் என்றும், தன்னிடம் உள்ள ஆதாரங்கள் மூலம் வழக்கறிஞர்கள் உதவியுடன் அவருடைய முகத்திரையை விரைவில் கிழிக்கவுள்ளதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை வைத்து கொண்டு அவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும் என்றும், விரைவில் திருமணமாகவுள்ள அவர் நம்பர் ஒன் பிளாக் மெயிலர் என்றூம், விரைவில் அவருக்கு சிறை காத்திருக்கின்றது என்றும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

பதவியை கையில் வைத்து கொண்டு பல தயாரிப்பாளர்களை அவர் மிரட்டி வருவதாகவும், தயாரிப்பாளர்கள் கோபப்பட்டால் அந்த நபரின் பதவி ஆட்டம் காணும், பல சின்ன தயாரிப்பாளர்கள் அவரால் பல துன்பங்களை அடைந்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் மீது கடுமையாக குற்றஞ்சாட்டிய ஸ்ரீரெட்டி அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அட்வான்ஸ் பெற்றதும் தனது நிலையை மாற்றி கொண்டார். இதேபோல் இந்த நடிகரின் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஸ்ரீரெட்டி தனது நிலையை மாற்றி கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

நானும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்: யாஷிகாவின் 'மீடூ' குற்றச்சாட்டு

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இசைத்துறை உள்பட பல துறைகளில் மீடூ பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி புகார் எதிரொலி: அர்ஜூன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

மீடூ குற்றச்சாட்டு குறித்த விவகாரம் கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் சமீபத்தில் பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன்

கள்ளக்காதலுக்கு ஆர்.கே.நகர் டெக்னிக்கை பயன்படுத்திய இளம்பெண்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.20 டோக்கன் கொடுத்து அந்த டோக்கனை தேர்தல் முடிந்த பின்னர் கொடுத்து பணம் பெற்று கொள்ளலாம்

தீபாவளிக்கு களமிறங்குகிறது 'தல' அஜித் டீம்

தல அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்சா என்னும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட டீம் சமீபத்தில் உலக அளவில் சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

'தல' நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த விக்னேஷ் சிவன்

இந்திய கிரிக்கெட் அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியை