என்னை ஏற்று கொள்ள விரும்புபவரை திருமணம் செய்ய தயார்: ஸ்ரீரெட்டி

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

என்னுடைய பழைய வாழ்க்கையை அறிந்து என்னை விரும்பி ஏற்று கொள்ள முன்வருபவரை திருமணம் செய்ய தயார் என்று ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கு, தமிழ் திரையுலகின் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் உள்ளார். ஆந்திராவில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், எனவே தமிழகத்தில் செட்டிலாக முடிவு செய்திருப்பதாக கூறும் ஸ்ரீரெட்டி, 'தனது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தன்னை விரும்பி ஏற்றுக் கொள்ள யாரேனும் முன்வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார் என்று கூறியுள்ளார்.

ஆந்திராவில் பியூட்டி பார்லர் வைத்திருந்த ஸ்ரீரெட்டி பின்னர் வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துறையால் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் பிரபல சினிமா நட்சத்திரங்களை பேட்டி எடுத்தார். 'சிங்கம்' படம் தெலுங்கில் ரிலீஸானபோது அவர் சூர்யாவை பேட்டி எடுத்துள்ளார். அதன்பின்னர் ஒருசில தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் திரையுலகினர் மீது அதிர்ச்சி தரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிவரும் ஸ்ரீரெட்டி, திருமணத்திற்கு தயார் என்றும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் ரசிகர்களுக்கு சன்னிலியோன் அளித்த தகவல்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு வெப் தொடரான 'கரஞ்சித் கவுர்' தமிழ் உள்பட பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

தமிழக சிறுமிக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது கிடைத்த பெருமை

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.

கமல்ஹாசனை சந்திக்க மறுத்த பகவான் ஆசிரியர்

சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பகவான் என்ற ஆசிரியருக்கு இடமாற்ற உத்தரவு வந்தபோது அந்த பள்ளியில் படித்த மாணவ,

தமிழக மாணவர்களின் கருணை மதிப்பெண்களுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிகள் இருந்ததால் தமிழில் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்

'சூர்யா 37' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.