உடலுக்கு நல்லது என கூறிய Facebook வீடியோ பார்த்து, ஜூஸ் போட்டு குடித்த இளைஞர் பலி.

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

இலங்கையின் கம்பஹா பகுதியை சேர்ந்த ஒருவர் தன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் அதிகமாக நேரம் செலவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படியாக இவர் ஒரு நாள் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்த போது அதில் கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பரிந்து அதை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

அதை பார்த்த அவர் அப்படி செய்ய நினைத்து அந்த மரத்தின் இலைகளை பறித்து ஜூஸ் போட்டு குடித்துள்ளார். அவர் ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

கஜ மடாரா மரத்தை பார்த்து யானைகள் கூட பயப்படும். பாம்புகள், பூச்சிகள் கூட இந்த மரத்தின் இலை, காய், கனி என எதையும் தொடாது. அவ்வளவு விஷமுள்ள மரத்தின் இலைகளை ஃபேஸ் புக்கில் வீடியோவாக வந்தது என்பதற்காக உண்மைத்தன்மை அறியாமல் இளைஞர் ஜூஸ் போட்டு குடித்து உயிர் விட்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More News

மணப்பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.!

சேலை பிடிக்காததற்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவினைக் குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவைக் குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்

நெய்வேலியில் விஜய் ரசிகர்கள் மீது தடியடி: பெரும் பரபரப்பு

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடம் அருகே பாஜகவினர் இன்று மாலை திடீரென குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது 

அம்மா, தம்பியை கத்தியால் குத்திவிட்டு காதலனுடன் டூர் சென்ற இளம்பெண்!

பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாயையும் தம்பியையும் கத்தியால் குத்திவிட்டு அந்தமானுக்கு காதலனுடன் டூர் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அம்பு எய்தல் போட்டியில் உலக சாதனை செய்து 5 வயதில் 'டாக்டர்' பட்டம் வாங்கிய சிறுமி..!

அம்பு எய்தல் போட்டியில் சிறந்து விளங்கும் 5 வயதுச் சிறுமி சஞ்சனாவுக்கு மும்பையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.