மரணத்திற்கு பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த தேசிய விருது

  • IndiaGlitz, [Friday,April 13 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் அவரது மரணத்திற்கு பின் அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

'மாம்' என்ற இந்தி படத்தில் ஸ்ரீதேவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இது ஸ்ரீதேவிக்கு கிடைத்த முதல் தேசிய விருது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

'மாம்' திரைப்படம் இந்தியில் தயாராகிய போதிலும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் டப் செய்யபப்ட்டது. என்பது நான்கு மொழிகளிலும் ஸ்ரீதேவியே சொந்தக்குரலில் டப்பிங் பேசினார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.