ஸ்ரீதேவி உடல் வருகை தாமதம்! என்ன நடக்கின்றது துபாயில் ?

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர்களும், இந்திய தூதரகமும் தீவிர முயற்சி செய்து வருகிறது. சாதாரணமாக ஒருவர் துபாயில் இறந்துவிட்டால் அவரது உடல் நாட்டை விட்டு வெளியேற குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும். ஆனால் ஸ்ரீதேவி ஒரு விஐபி என்பதால் துபாயில் உள்ள இந்திய தூதரகமே துபாய் காவல்துறை உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இன்று மதியம் மூன்று மணிக்குள் ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துவிடும் என்றும், அதன்பின்னர் அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர என்னென்ன நடவடிக்கை தேவை என்பதை தற்போது பார்ப்போம்

முதலில் தடயவியல் அறிக்கை ஒப்படைக்கப்பட்டதும் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்ய எடுத்து செல்லப்படும் என்றும், அதன் பின்னர் காவல்துறையினர்களிடம் இருந்து இறப்பு சான்றிதழை பெற வேண்டும்

அதன் பின்னர் ஸ்ரீதேவி மரணம் அடைதுவிட்டதால் அவரது பாஸ்போர்ட்டை இந்திய தூதரகம் ரத்து செய்யும். பின்னர் துபாயின் குடியேற்றத்துறை உடலை அனுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்

மேலும் உடலை ஒப்படைக்க அரசு வழக்கறிஞர் அனுமதி அளித்த பின்னர் தனி விமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர ஏற்கனவே அனில் அம்பானியின் தனி விமானம் துபாய்க்கு நேற்று மாலையே சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு

சென்னை போரூர் அருகே சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தஷ்வந்த்துக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஸ்ரீதேவி மரணத்திற்கு காரணம் என்ன? தோழி கூறும் திடுக்கிடும் தகவல்

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 54 வயதிலும் 40 வயது பெண் போல் இளமையான தோற்றத்தில் இருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு அனைவரையும்

கடந்த வார திரைப்படங்களின் வசூல் நிலவரம்: ஒரு பார்வை

கடந்த வாரம் தமிழில் கேணி, 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த படங்களின் வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

ஜோதிகாவின் நாச்சியார்: ரூ.2 கோடியை நெருங்கிவிட்ட சென்னை வசூல்

முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்ரீதேவி உடல் இந்தியா வர தாமதம் ஏன்?

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் இரவு துபாயில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு இந்திய திரையுலகையே உலுக்கியது.