ஸ்ரீதேவி மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் சுவாமி

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

ஸ்ரீதேவி மரணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவரது மரணம் மர்மமாக இருப்பதாகவும் இதுகுறித்து தீர விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆல்கஹால் கலந்த மதுவகைகளை அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி பதிவு என்ன ஆச்சு என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்ரீதேவி மாரடைப்பால்தான்  மரணமடைந்தார் என திடீரென டாக்டர்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 குளியல் தொட்டியில் யாரேனும் தள்ளி மூச்சுவிட முடியாதபடி அழுத்தினால் மட்டுமே மரணம் ஏற்படும் என்றும் அவர் தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார். மேலும் பாலிவுட் நடிகைகளுக்கும் தாவூத் இப்ராகிமிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் யோசிக்க வேண்டியிருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

More News

மருத்துவமனையில் அனுமதியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

நடிகர் விஷால் அமெரிக்காவின் கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான நோய் என்பது தெரியவில்லை என்றும் பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் கடந்த சிலநாட்களாக பரவி வந்தது

குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மரணம்: என்ன சொல்கிறது டேட்டா?

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டது.

பொது மேடையில் இரண்டு காமெடி நடிகர்களுக்கு முத்தம் கொடுத்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகத்தமிழர்களிடையே புகழ் பெற்ற ஓவியா, அந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆனபோனதிலும் இன்னும் சமூக வலைத்தள டிரெண்டில் உள்ளார்

இந்தியாவுக்கு ஸ்ரீதேவி உடல்: துபாய் காவல்துறை முக்கிய அறிவிப்பு

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றே இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துபாய் காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டது.

உண்மையை தெரிந்து கொண்டு எழுதுங்கள்: சீமானுடன் நடிப்பது குறித்து குஷ்பு

சென்னையை சேர்ந்த சமூக போராளி டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்றில் டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார்