உன்னை பூமிக்கு கொண்டு வர மறுஜென்மம் எடுத்துள்ளேன்.. ஸ்ரீதேவி அசோக்கின் தாய்மை பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,May 28 2024]

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நிலையில் அது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த குழந்தை பிறப்பின் போது தனக்கு மறு ஜென்மம் போல் ஏற்பட்டதாகவும் தனது குழந்தைக்காக தான் உயிரை பணயம் வைத்ததாகவும் தனது தாய்மை அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’ராஜா ராணி’ ’இளவரசி’ ’தங்கம்’ உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக் . இவருக்கு ஏற்கனவே சித்தாரா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு இரண்டாவது ஆக பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தனது இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள அவர் என்னுடைய பயங்கள் அனைத்தையும் நான் மெட்டல் போல் குத்திக் கொண்டேன்.

ஒவ்வொரு குழந்தை பிறப்பும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானதாக இருக்கும், எனக்கு குழந்தை இருக்கும்போது என்னுடைய உடல் சிறப்பாக ஒத்துழைத்தது, ஆனால் அதே நேரத்தில் பிரசவத்தின் போது நான் என் உயிரை பணயம் வைத்தேன், உன் மகிழ்ச்சியான முகத்தை பார்ப்பதற்காக பல தடைகளை கடந்தேன், உன்னை பெற்றெடுத்ததால் ஏற்பட்ட வலியை கடக்க எனக்கு நீண்ட நாட்கள் ஆகும் என்று தெரியும், ஆனால் என்னுடைய உடலில் எப்போதுமே அந்த பர்த் மார்க் இருக்கும், நீ வளர்ந்த பிறகு இந்த கதைகளை உனக்கு நான் சொல்வேன்.

பிரசவத்தால் என்னுடைய உடல் தளர்ந்து விடவில்லை, மனதளவில் நான் உனக்காக மறு ஜென்மம் எடுத்து என்னை நானே மீண்டும் உறுதி ஆக்கி உள்ளேன், ஒரு அம்மாவாக நான் உன்னை இந்த பூமிக்கு கொண்டு வந்ததில் பெருமைப்படுகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். ஸ்ரீதேவி அசோக்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

இரட்டை குழந்தைக்கு தாயாகிய நடிகை அமலா பால்.

சிறிது மாதத்திற்கு முன்பாக அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.இறுதியாக தான் இரட்டை குழந்தைக்கு தாய் ஆகியுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்...

விவாகரத்து குறித்த சர்ச்சைக்கு பதில் கொடுத்த நடிகை நமீதா.

சினிமாவில் இது போன்ற நிறைய வதந்திகளை ஏற்கனவே நிறைய பார்த்து விட்டேன்.எனவே என் கணவர் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை...

வசியம் மூலம் கணவன்-மனைவி ஒற்றுமை, குழந்தைகள் சொல் பேச்சு கேட்க, பணம் பெற வழி!

பிரபல ஜோதிடர் ஹேமா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வசியம் பற்றியும், அதன் வகைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்

வெளிநாட்டில் திருமணம்.. சென்னையில் மெஹந்தி.. வரலட்சுமி திருமணத்தின் பிரமாண்ட ஏற்பாடு..!

நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோலா சச்தேவ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது திருமண தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய்.. வதந்திகளை அடித்து நொறுக்கிய புகைப்படம்..!

தளபதி விஜய் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அப்பாவுடன் விஜய் பேச மாட்டார் என்ற வதந்தி அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக