ஆஸ்கார் விழாவில் தமிழ் நடிகைக்கு கிடைத்த மரியாதை

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

உலகம் முழுவதும் சினிமா நட்சத்திரங்களால் மதிக்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 90வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பல நாடுகளை சேர்ந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். நம்மூரில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் திடீரென எதிர்பாராமல் ரசிகர்களை துயரக்கடலில் மூழ்கடித்து மறைந்த இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவிற்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை இந்திய நேரப்படி 9.35 மணிக்கு இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் பழம்பெரும் நடிகர் சசிகபூர் ஆகியோர்களுக்கு மறைவிற்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக மேடையில் அறிவிக்கப்பட்டது. ஒரு தமிழ் நடிகையின் மறைவிற்கு உலக அளவில் நடைபெறும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

More News

நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து

நயன்தாரா கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். புதிய வரவு நடிகைகளும் ஏற்கனவே உள்ள நடிகைகளும் அவரது இடத்தை அசைக்க முடியாத நிலையே தற்போது வரை உள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஹிட் படத்தின் சென்னை வசூல் நிலவரம்

2018ஆம் ஆண்டில் விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்திகரமான லாபத்தை கொடுத்த முதல் படம் என்ற பெருமை சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு 2' திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: இதுவரை பெற்ற விருதுகளின் விபரம்

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளின் விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 62' படத்தில் திடீரென இணைந்த வரலட்சுமி

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிந்தன