close
Choose your channels

சூர்யா-கார்த்தி ரசிகர்களுக்கு பிரபல தயாரிப்பாளரின் வேண்டுகோள்!

Saturday, April 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி பசியால் வாடுகின்றனர். இருப்பினும் பல சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஏழை எளிய மக்களுக்கு ரொக்கம் மற்றும் உணவுப்பொருட்கள் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதில் மாஸ் நடிகர்களின் ரசிகர்களின் பங்கு மகத்தானது. ரஜினி, அஜித், விஜய் உள்பட பல நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் சொந்த காசை போட்டு ஏழை, எளிய மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் சேவையை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் கடந்த சில நாட்களாக ஓய்வின்றி மாநிலம் முழுவதும் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மாஸ்குகள் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய சேவைக்கு பாராட்டுக்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு உதவி செய்யும் போது மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பான உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள், அதேபோல் சமூக விலகலையும் கட்டாயம் கடைபிடியுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment