போதை மருந்து விவகாரம்: பிரபல நட்சத்திரங்களுக்கு குறிக்கப்பட்ட தேதிகள்

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

ஐதராபாத்தில் சமீபத்தில் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் குறித்து தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் 11 பேருக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறித்து வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் யார் யாருக்கு எந்தெந்த தேதிகளில் விசாரணை நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
ஜூலை 19 - பூரி ஜெகந்நாத்
ஜூலை 20 - சார்மி மற்றும் முமைத்கான்
ஜூலை 21 - சுப்பாராஜ்
ஜூலை 22 - ஷ்யாம் கே.நாயுடு
ஜூலை 23 - ரவிதேஜா
ஜூலை 24 - ஸ்ரீனிவாஸ் ராஜூ
ஜூலை 25 - சின்னா
ஜூலை 26 - நவ்தீப்
ஜூலை 27 - தருண்
ஜூலை 28 - நண்டு
ஜூலை 29 - தனிஷ்
மேற்கண்ட தேதிகளில் நடப்பது முதல்கட்ட விசாரணை மட்டுமே. முழு விசாரணையின் முடிவில் தான் இவர்களில் எத்தனை பேர் குற்றவாளிகள், எத்தனை பேர் நிரபராதிகள் என்பது தெரியவரும்.