பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்பிபி: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என உலகமே அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை 6 மணிக்கு எஸ்பிபியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பார்வையற்ற ஒருவருக்கு சர்ப்ரைஸ் அளித்த எஸ்பிபி குறித்த பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இலங்கையிலுள்ள மாறன் என்ற சட்ட பேராசிரியர் ஒருவர் விபத்து ஒன்றில் திடீரென கண் பார்வை இழந்தார். இதனையடுத்து அவர் தனக்கு ஆறுதலாக இருந்தது எஸ்பிபி அவர்களின் பாடல்கள் மட்டுமே என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

எஸ்பிபி அவர்களை நேரில் ஒருமுறை சந்தித்தால் அதில் ஏற்படும் மனத்திருப்தி எனக்கு வேறு எதிலும் கிடைக்காது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் அந்த ரசிகரை நேரில் சந்தித்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததோடு அவருக்கு ஆறுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்தார்.

மேலும் அந்த ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்கி சில பாடல்களையும் அவர் பாடி மாற்றுத்திறனாளி ரசிகர்கரையும் பாட வைத்து அவரை மகிழ்வித்தார். பார்வையற்ற ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இந்த வீடியோ தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி : Varnam Malaysia

More News

அட லூசுங்களா! நித்தியானந்தாவின் வேற லெவல் காமெடி: வைரலாகும் வீடியோ

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இந்திய அரசால் தேடப்பட்டு கொண்டிருக்கும் நித்தியானந்தா, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்

ஒரே ஒரு எலியால் ஒரு கோடி ரூபாய் சேதம்: சிசிடிவியில் அதிர்ச்சி காட்சிகள்

ஒரே ஒரு எலியால் கார் சர்வீஸ் செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

எஸ்பிபிக்காக கூட்டுப்பிரார்த்தனை: மெழுகுவர்த்தி ஏந்தி ரசிகர்கள் பிரார்த்தனை

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வேண்டும்

இதை உங்களால் மட்டுமே செய்ய முடியும் சார்: எஸ்பிபி வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கள்ளக்காதலில் மனைவி ஓட்டம், கள்ளக்காதலனின் மாமனாரை கொலை செய்த கணவர்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் வாலிபர் ஒருவரின் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதால், அந்த ஆத்திரத்தில் கள்ளக்காதலனின் மாமனாரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது