வருங்காலத்தில் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்: பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ்..!

  • IndiaGlitz, [Sunday,February 18 2024]

தனது தந்தையை எஸ்பி பாலசுப்பிரமணியன் குரலை தனது அனுமதி இன்றி பயன்படுத்திய பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சினிமா துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மறைந்த பிரபல பாடகர்களின் குரல்களை ஏஐ மூலம் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட இசைப்புயல் ஏஆர் ரகுமான் தகுந்த அனுமதி பெற்று இரண்டு பழம்பெரும் பாடகர்களின் குரல்களை ஏஐ மூலம் பயன்படுத்தினார் என்ற செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் என்பவர் தெலுங்கு படம் ஒன்றுக்காக எஸ்பிபி அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதை பேட்டி ஒன்றில் அவரே ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியான நிலையில் எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு ஏஐ மூலம் அவரது குரல் பயன்படுத்துவது என்பது மகிழ்ச்சியான விஷயம் தான் என்றாலும், எங்களுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்துவது வேதனையான விஷயம் என்று எஸ்பிபி சரண் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு திறமையாளரின் குரல் வணிக சுரண்டலுக்காக அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது, இந்த நிலை தொடர்ந்தால் இசை துறையில் தங்களது குரலை சொத்தாக கருதும் பாடகர்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும் என்றும் எஸ்பிபி சரண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது தந்தையின் குரலை முறையாக அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள எஸ்பிபி சரண், தகுந்த நஷ்ட ஈடு மற்றும் ராயல்டி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'கேப்டன்' மறைந்த சோகம்.. மனதை தேற்றி கொண்டு மீண்டும் களத்தில் இறங்கிய  சண்முக பாண்டியன்..!

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மகன் சண்முக பாண்டியன் தந்தை மறைவை அடுத்து மனதை தேற்றிக்கொண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல

சென்னை கல்லூரியில் திடீர் விசிட் அடித்த சமந்தா.. மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு..!

நடிகை சமந்தா சென்னையில் உள்ள கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த நிலையில் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

'தலைவர் 171' படப்பிடிப்பு எப்போது? 'லியோ 2' உருவாகுமா? லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தின் படப்பிடிப்பு எப்போது மற்றும் விஜய்யின் 'லியோ 2' உருவாகுமா? ஆகிய கேள்விகளுக்கு இன்று நடந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் அப்டேட்

ஸ்பெஷல் பிரியாணியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. யாருடன் தெரியுமா?

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து

19 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. பிரபல நடிகருக்கு மகளாக நடித்தவர்..!

பிரபல நடிகருக்கு மகளாக நடித்த 19 வயது நடிகை திடீரென மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.