எஸ்பிபி சைகை காட்டி என்னை நலம் விசாரித்தார்: எஸ்பிபி சரண் நெகிழ்ச்சி 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று அவரது உடல் சீராக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகளின் உதவியால் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் எஸ்பிபி சரண் அவர்கள் நேற்று வெளியிட்ட வீடியோவில் தனது தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் கண்விழித்து பார்த்து தன்னை அடையாளம் கண்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் குணமடைய ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருவதாக அவரிடம் தான் கூறியதும் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், என்னையும் என் தாயின் உடல் நலத்தையும் சைகை மூலம் அவர் கேட்டார் என்றும் நெகழ்ச்சியுடன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் பிரார்த்தனையால் விரைவில் எனது தந்தை குணமடைந்து அனைவரையும் சந்திப்பார் என்றும் மருத்துவ குழுவினர் அவருக்கு தேவையான தகுந்த சிகிச்சைகளை செய்து வருவதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

எஸ்பிபி உடல்நிலை சீராக இருப்பதாக வந்த தகவலை அடுத்து தற்போது அவர் கண்விழித்து சைகை மூலம் தனது மகனிடம் நலம் விசாரித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

View this post on Instagram

#SPB health update. I met dad.

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on Aug 24, 2020 at 7:16am PDT

More News

இயக்குனர் கார்த்திக் ராஜூவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை நாயகியா?

தினேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் ராஜூ.

குடும்பத்துடன் செல்பி எடுத்து பிறந்த நாளை கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்!

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடினார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ரூ.2 லட்சம் நிவாரண உதவி செய்த விஜய் ரசிகர்கள்: குவியும் பாராட்டுக்கள்

ஒவ்வொரு இயற்கை பேரிடரின்போதும் விஜய் ரசிகர்கள் முதல் நபராய் களத்தில் இறங்கி தங்கள் சொந்த பணத்தில் நிவாரண உதவி செய்து வருவதை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

விக்ரம் இல்லாமலேயே முடிவடைகிறதா 'துருவ நட்சத்திரம்? பரபரப்பு தகவல் 

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்தால்

சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் தமன்னா; டைட்டில் அறிவிப்பு

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும் ஒரு இந்தி படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.