கடவுளுக்கும் மனசாட்சி இருக்கு: எஸ்பிபி சரண் உருக்கம்

  • IndiaGlitz, [Thursday,August 20 2020]

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்காக ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனையை செய்ய உள்ளது என்பதும் அவரது பாடல்களை ஒலிபரப்பி அனைவரும் பிரார்த்தனை செய்ய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து தினந்தோறும் தகவல்களை தெரிவித்து வரும் அவரது மகன் எஸ்பிபி சரண் சற்று முன்னர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எஸ்பிபியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ரசிகர்களின் வேண்டுதல் எஸ்பிபி அவர்களை மீட்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

ரசிகர்களின் வேண்டுதலில் அவர் நிச்சயம் மீண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றும் அனைவரும் பிரார்த்தனை செய்வதற்கு மிகவும் நன்றி என்றும் அனைவருக்கும் தலை வணங்குகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடவுளுக்கும் மனசாட்சி இருக்கு என்றும் கண்டிப்பாக அவரை கடவுள் காப்பாற்றி விடுவார் என்றும் எஸ்பிபி அந்த வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எஸ்பிபி சரணின் இந்த வீடியோவில் இருந்து எஸ்பிபி அவர்கள் தற்போதும் கவலைக்கிடமாகத்தான் உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது